பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்... 40 நாட்கள் இயங்காதாம்..!

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை இன்று (ஆக்டோபர் 7) முதல் 40 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

Oct 07, 2024 - 09:12
0 1.1
பழனியில் ரோப் கார் சேவை நிறுத்தம்... 40 நாட்கள் இயங்காதாம்..!

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் செல்லும் ரோப் கார் சேவை இன்று (ஆக்டோபர் 7) முதல் 40 நாட்கள் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் மின் இழுவை ரயில், படிப்பாதை, யானை பாதை, ரோப் கார் வழியாக மலைக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். 

இந்நிலையில் ரோப் கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும், வருடத்திற்கு ஒரு மாதமும் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்படுவது வழக்கம். அதனடிப்படையில், ரோப் கார் சேவை  இன்று 7.10.24 முதல் 40 நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

ரோப் காரில் மேல் தளத்தில் புதிய சாஃப்ட்டுகள், புதிய கம்பி வடம் ,உருளைகள் ,பெட்டிகள் பொருத்தபட்டு பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சோதனை ஓட்டம் நடைபெற்ற பின்னர் ஐஐடி வல்லுனர் குழு ஆய்வு செய்த பிறகு ரோப் கார் சேவை  பராமரிப்பு பணிகள் முடிந்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். பக்தர்கள் படிப்பாதை , யானை பாதை ,மின் இழுவை ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User