அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி

மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் நாளை காலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oct 01, 2024 - 21:56
Updated: 2 years ago
0 378
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் மருத்துவமனையில் அனுமதி

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வயிற்றுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி கட்டிடங்கள் குறித்தும்  நூலகங்கள் குறித்தும் கேட்டறிந்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் இடைநிற்றல் குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரியிடம் கேட்டறிந்து, பள்ளிக்கு வராமல் நின்று போன மாணவியின் பெற்றோருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவர்களின் நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக சென்னை அமைத்தகரை உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாலை அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் நாளை காலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரை அன்பில் மகேஷ் பொய்யாமொழியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க சென்றுள்ளார். இதன்காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User