பரந்தூர் விமான திட்டம்: காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து ஆய்வு குழு அமைப்பு!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு காங்கிரஸ் சசிகாந்த் செந்தில் தலைமையில் குழு அமைத்துள்ளது.

Jul 10, 2026 - 11:33
0 186
பரந்தூர் விமான திட்டம்: காங்கிரஸ் நிலைப்பாடு குறித்து ஆய்வு குழு அமைப்பு!

பரந்துர் விமான நிலைய திட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசித்து அறிக்கை தயார் செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், எம்.பி. அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், காஞ்சிபுரம் மாவட்டம், பாந்தூர் விமானம் நிலைய திட்டத்தின் தற்போதைய சூழலில் காங்கிரசின் நிலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களிடம் கலந்து பேசி அறிக்கை தயார் செய்து சமர்ப்பிக்க மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சசிகாந்த் செந்திலை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் திரு. மோகன் குமாரமங்கலம் ஆகியோர் உறுப்பினராக செயல்படுவார்கள் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User