இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை ஈமெயிலில் அனுப்பிய வாலிபர் கைது

பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Dec 09, 2023 - 12:06
Updated: 3 years ago
0 304
இளம் பெண்ணின் ஆபாச புகைப்படங்களை  ஈமெயிலில்  அனுப்பிய வாலிபர் கைது

மின்னஞ்சல் மூலம் இளம் பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படங்கள் அனுப்பிய வாலிபரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை ஐயப்பன் தாங்கலை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.அப்புகாரில் தான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும்,தனக்கு தன்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் பல மின்னஞ்சல்கள் மூலம் வருவதாகவும் புகார் அளித்திருந்தார்.

மேலும் தனக்கு முகமது சுல்தான் (29)என்பவர் மீது சந்தேகமாக உள்ளதாக புகாரில் தெரிவித்திருந்தார்.இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இளம்பெண் தான் சந்தேகிப்பதாக புகாரில் கூறிய முகமது சுல்தான் பல மின்னஞ்சல்கள் மூலம் இளம்பெண்ணுக்கு அந்தரங்க புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்தது.

இதனை அடுத்து குன்றத்தூரை அடுத்த கோவூரில் தங்கி இருந்த முகமது சுல்தானை கைது செய்த ஆவடி இணைய வழி குற்றப்பிரிவு போலீசார் பூந்தமல்லி முதலாம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User