"கிழவியை கூட விட்டு வைக்கலயாடா" 90 வயது மூதாட்டிக்கு நடந்த அவலம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்

மத்தியப் பிரதேசத்தில் 90 வயது மூதாட்டி கூட்டுப் பாலியல் வன்கொடுமை கொடூரம் அரங்கேறியுள்ளது. குற்றவாளிகள் நான்கு பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Mar 09, 2026 - 05:50
0 422
"கிழவியை கூட விட்டு வைக்கலயாடா" 90 வயது மூதாட்டிக்கு நடந்த அவலம்,  கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர்
90 வயது மூதாட்டியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த அவலம்

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதன் பின்னர் மூதாட்டியை கட்டிலுடன் கிணற்றில் வீச முயன்றனர். அப்போது, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர்.பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவரது நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுப் போராட்டம் நடத்தினர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User