பிறந்தநாள் பார்ட்டிக்கு பப்புக்கு போன பிரியா.. அசிங்கமாக திட்டி குத்துவிட்ட பவுன்சர்.. தட்டி தூக்கிய போலீஸ்

Apr 29, 2024 - 11:02
0 201
பிறந்தநாள் பார்ட்டிக்கு பப்புக்கு போன பிரியா.. அசிங்கமாக திட்டி குத்துவிட்ட பவுன்சர்.. தட்டி தூக்கிய போலீஸ்

சென்னையில் கேளிக்கை விடுதிக்கு பிறந்தநாள் கொண்டாட சென்ற இளம்பெண்ணை தாக்கிய பவுன்சர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் பிரியா. இவர் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.  கடந்த 27ஆம் தேதி தனது சகோதரி ஆதிரா மற்றும் நண்பர்கள் சிலம்பு, கீர்த்தனன், ஜெகன் ஆகியோருடன் நந்தனம் பகுதியில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார்.

சிலம்புவின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக ப்ரியா அனைவரையும் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த பவுன்சர் யோகேஷ் என்பவர், ப்ரியா மற்றும் உடன் சென்றவர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ப்ரியா உள்ளிட்டோரை பவுன்சர் யோகேஷ் தாக்கியதாகவும், அனைவரையும் தரக்குறைவாக பேசியதாகவும் தெரிகிறது. மேலும் ப்ரியாவை தாக்கி கீழே தள்ளியதில் அவருடைய காது, தலை கை, கால்களில் காயம் ஏற்பட்டதாகவும், இதை தட்டிக்கேட்ட ஆதிரா மற்றும் அவரது நண்பர்களை யோகேஷ் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரியா ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ப்ரியா அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக திட்டுதல், சிறை வைத்தல், காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு ஆகிய 5 பிரிவுகளில் யோகேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User