பெட்ரோல், டீசல்  தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்: வதந்தி நம்ப வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் 

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து, பெட்ரோல், டீசலுக்கும் தட்டுப்பாடு வரக்கூடும் என்ற செய்தி பரவி வருகிறது. 3 நாட்களுக்கு பெட்ரோல் கிடைக்காது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலா வருகிறது. இதனால் அச்சம் அடைந்த வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் பெட்ரோல் பங்குகளுக்கு படையெடுத்து நீண்ட வரிசையில் காத்து கொண்டு இருக்கின்றனர். 

Mar 12, 2026 - 02:59
0 485
பெட்ரோல், டீசல்  தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்: வதந்தி நம்ப வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் 
பெட்ரோல், டீசல்  தட்டுப்பாடு, பங்குகளுக்கு படையெடுக்கும் மக்கள்

ஈரான், இஸ்ரேல் போர் காரணமாக சிலிண்டர் விநியோகம் நாடு முழுவதும் தடைப்பட்டுள்ளது. ஹோட்டல், விடுதிகள் என பலரும் இந்த தட்டுப்பாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சிலிண்டர் தட்டுப்பாட்டை தொடர்ந்து பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக பரவலாக செய்திகள் உலா வருகின்றன. 

இதனால் நேற்று நள்ளிரவு முதலே சென்னை, திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் பங்குகளில் வாகன ஒட்டிகள் கூட்டம் அலை மோதியது. இன்று காலையிலும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் காத்திருந்தன. வழக்கமாக 100 ரூபாய், 200 ரூபாய்க்கு பெட்ரோல் போடுபவர்கள் கூட டேங்குகளை முழுவதுமாக நிரப்பிச்செல்கின்றனர். 

தினசரி வேலைகள், அலுவலகப் பயணம் மற்றும் அவசர தேவைகளுக்கு வாகனங்கள் அவசியமாக இருப்பதால் எந்தவித சிக்கலும் ஏற்படாமல் இருக்கவே இப்படி முன்கூட்டியே எரிபொருள் நிரப்பிக் கொள்கிறோம் என்று பொதுமக்கள் கூறினர். 

வதந்திகளை நம்ப வேண்டாம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் 

இந்நிலையில் வதந்திகளை நம்பி, மக்கள் தேவையின்றி பீதியடைய வேண்டாம் இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நாடு முழுவதும் உள்ள அனைத்து HPCL சில்லறை விற்பனை நிலையங்களும் (எரிபொருள் நிலையங்கள்) முழுமையாக வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு விநியோகிக்கப்படுகின்றன மற்றும் விநியோகம் சீராக தொடர்ந்து வருகிறது.வாடிக்கையாளர்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்த வேண்டாம். பீதியடைந்து வாங்குவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User