‘எனது 6 மாத குழந்தையை கொசு கடிக்கிறது’-குவைத்தில் இருந்து தஞ்சைக்கு இ-மெயில் அனுப்பிய தந்தை

சுகாதார ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சின்ன அரிசிக்காரத்தெருவுக்கு சென்று அந்த பகுதி முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Jan 04, 2024 - 17:16
Updated: 3 years ago
0 163
‘எனது 6 மாத குழந்தையை கொசு கடிக்கிறது’-குவைத்தில் இருந்து தஞ்சைக்கு இ-மெயில் அனுப்பிய தந்தை

தனது 6 மாத குழந்தையை கொசு கடிக்கிறது என தந்தை குவைத்தில் இருந்து தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாநகராட்சி பகுதியில் தற்போது கொசுத்தொல்லைகள் அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக மழைக்காலம் முடிந்ததையடுத்து, கொசுக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன.மாலை 5 மணி முதல் கொசு தொந்தரவால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். 

இந்த நிலையில் தஞ்சை மாநகராட்சிக்கு இ-மெயில் மூலம் குவைத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை பார்த்த அதிகாரிகள், அந்த கடிதத்தை காதர்உசேன் என்பவர் எழுதி இருந்தார்.அவர் தான் தஞ்சை மாநகராட்சி 30-வது வார்டில் உள்ள சின்ன அரிசிக்காரத் தெருவை சேர்ந்தவர் என்றும் தற்போது குவைத்தில் வேலை செய்து வருவதாக கூறி உள்ளார். 

சின்ன அரிசிக்காரத் தெருவில் வசிக்கும் தனது 6 மாத கைக்குழந்தையான அன்புமகளை கொசு கடிப்பதாகவும், கொசுவை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.இதையடுத்து சுகாதார ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்கள் சின்ன அரிசிக்காரத்தெருவுக்கு சென்று அந்த பகுதி முழுவதும் கொசுமருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User