அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலில் அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனவும் ஈரான் தெரிவித்துள்ளது. 

Apr 03, 2026 - 10:18
0 486
அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மும்பையில் உள்ள ஈரான் தூதரகமும் உறுதி செய்துள்ளது. ஈரான் தூதரக எக்ஸ் பதிவில், ‘எதிரியின் மற்றொரு F-35 விமானம் நமது உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளால் தாக்கப்பட்டு வீழ்த்தப்பட்டது. ஈரான் ஒரு வலிமையான சக்தி’. என பதிவிட்டுள்ளது. 

இதற்கு முன்பு கடந்த மார்ச் 19-ம் தேதி அமெரிக்காவின் F-35 விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இத்தகைய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகின் முதல் நாடு தாங்கள் தான் என அப்போது ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இரண்டாவது F-35 போர் விமானம் சுட்டு வீழ்த்தி அமெரிக்காவிற்கு ஈரான் அதிர்ச்சி அளித்துள்ளது. 

மத்திய கிழக்கு நாடுகளில் மிக உயரமானப் பாலமாகவும் ஈரானின் பொறியியல் அடையாளச் சின்னமாகவும் விளங்கும் கராஜை தலைநகர் தெஹ்ரானுடன் இணைக்கும் பி1 பாலத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ரயில் நிலையத்தை ஈரான் தகர்த்து இருந்தது. தற்போது அமெரிக்க போர் விமானமான F-3

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User