காஞ்சிபுரத்தில் கன மழை-4மணி நேரத்தில் 23.20 மி.மீ மழை பதிவு

காஞ்சிபுரத்தில் 23.20மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூர்-1மில்லி மீட்டரும், வாலாஜாபாத்-3.40 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது.

Nov 22, 2023 - 13:06
Updated: 1 year ago
0 3.1
காஞ்சிபுரத்தில் கன மழை-4மணி நேரத்தில் 23.20 மி.மீ மழை பதிவு

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்  4 மணி நேரத்தில் 23.20 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்து உள்ள நிலையில், இயல்பான அளவைவிட மழையானது குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக நவம்பர் மாதத்தில் சராசரியாக பெய்ய வேண்டிய மழை அளவை விட இவ்வாண்டு குறைவாகவே பெய்துள்ளது.மேலும் வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக கடலோரம் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு-மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவதன்  காரணமாக தமிழகத்தில் 27-ந்தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அநேக இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,காந்தி ரோடு,பேருந்து நிலையம்,பெரியார் நகர், ஓரிக்கை, பூக்கடைச்சத்திரம், ஒலிமுகமதுப்பேட்டை,சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் வாலாஜாபாத்,சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழையானது பெய்து வருகிறது.

குறிப்பாக இன்று காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை 4 மணி நேரத்தில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிகப்படியாக காஞ்சிபுரத்தில் 23.20மில்லி மீட்டரும், https://inneco.org/ ஸ்ரீபெரும்புதூர்-1மில்லி மீட்டரும், வாலாஜாபாத்-3.40 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூர்-17மில்லி மீட்டரும், குன்றத்தூர்-6.60மில்லி மீட்டரும், செம்பரம்பாக்க்ம்-7.60 மில்லி மீட்டரும் என மொத்தம் 35.60மில்லி மீட்டரும், சராசரியாக 5.93மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கன மழையின் காரணமாக வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் சற்று சிரமம் அடைந்துள்ளனர். இருப்பினும் நீர் நிலைகள் கணிசமாக நிரம்ப துவங்கும் என்பதினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User