தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்திய பெண் டிஎஸ்பி: ரூ.2.5 கோடி அபேஸ் செய்த அவலம்

சட்டீஸ்கர் மாநிலத்தில் பெண் டிஎஸ்பி ஒருவர் தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்தி, கோடிகணக்கில் பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Feb 06, 2026 - 12:05
0 518
தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்திய பெண் டிஎஸ்பி: ரூ.2.5 கோடி அபேஸ் செய்த அவலம்
தொழிலதிபரை காதல் வலையில் வீழ்த்திய பெண் டிஎஸ்பி

சட்டீஸ்கர் மாநிலத்தில் தொழிலதிபரிடம் பணம் பறித்த பெண் காவல் அதிகாரி அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் தீபக் டாண்டனுக்கும், பெண் டிஎஸ்பி கல்பனா வர்மாவின் தந்தைக்கும் இடையே காசோலை தொடர்பான பணத் தகராறு ஏற்கனவே இருந்து வந்துது. 

இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் அந்தத் தொழிலதிபரைத் தனது காதல் வலையில் வீழ்த்திய கல்பனா வர்மா. அவரிடம் நெருங்கி பழகுவது போல நடித்துள்ளார். அவரை ஏமாற்றி பல முறை பணம் வாங்கியுள்ளார். தொழிலதிபர் அந்த பணத்தை திரும்ப கேட்ட போது பெண் டிஎஸ்பி மிரட்டி உள்ளார்.

தன்னிடம் இருந்து 2 கோடி ரூபாய் ரொக்க பணம், ஒரு சொகுசு கார், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் மற்றும் தங்க நகைகள் என மொத்தம் 2.5 கோடி ரூபாய் மேல் பெண் டிஎஸ்பி வாங்கியதாக தொழிலதிபர் புகார் அளித்தார். 

இந்த புகாரை விசாரித்த போலீசார் பெண் டிஎஸ்பி ஏமாற்றியதை  விசாரணையில் தெரிய வந்தது. இதை தொடர்ந்துதண்டேவாடா மாவட்டத்தில் பணியாற்றி வந்த கல்பனா வர்மாவை நேற்று சட்டீஸ்கர் அரசு அதிரடியாகப் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.

மேலும், காவல்துறையின் ரகசியத் தகவல்களைத் தனது செல்போன் மூலம் தொழிலதிபருக்குக் கசியவிட்டுப் பாதுகாப்பு விதிகளை மீறியதும், வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததும் விசாரணையில் உறுதி செய்துள்ளனர். 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User